Tuesday, December 7, 2010

An interview with Kamal Haasan

Kamal HaasanKamal Haasan and Trisha are in the lead roles in the film Manmadhan Ambu which has been directed by K S Ravikumar. This film is produced by Udhayanidhi Stalin. A press meet was held on Saturday. During this press meet, Kamal gave an interview to the media.

How is it that you are so youthful even at the age of 56 years? Are you taking any herbal medicines?

We should not about age. If there is a thought that we should be young, we can be youthful. I eat three times like everyone. I don’t take any Thanga Paspam (Gold elixir). If I had that much gold I would have put that also in cinema.

Rajnikanth had acted in a high budgeted film Endhiran directed by Shankar. Will you also act in such kind of high budgeted film?

I don’t imitate any one. I have individuality. If I have any doubt in acting I will think about my mentor Shivaji Ganeshan. There are a lot of things to learn from him. Don’t compare Rajni with me. We ourselves don’t compare. We also decided not act together many years ago. Dasavatharam was a high budgeted film and similarly Manmadhan Ambu is also a high budgeted film.

Why was Manmadhan Ambu shot in a luxury cruise liner?

The story of the film is connected with the cruise ship. I am donning the role of an ex commando. The story demanded the ship.

What is the reason for Madhavan continuously acting in your films?

The reason is the friendship between us.

Is rehearsal necessary for cinema?

When rehearsal is required for a stage play which is being staged at a cost of Rs 5 Lakhs, is it not necessary for a film that is being produced at a cost of Rs 5o Crores. The rehearsal for cinema is not my invention. There was rehearsal during Modern Theatres days itself. There was a very big hall for rehearsals in the studio those days itself.

Will Kamal Haasan act in the films written by him?

I will act if the story written by anyone. If you have a good story, I am ready to act.

During this interview, director K S Ravikumar, producer Udhayanidhi Stalin, actress Sangeetha, music composer Devi Sriprasad and choreographer Shobi was present.

Vijayalakshmi says that she is bored with homely roles

VijayalakshmiVijayalakshmi says that she is bored with homely roles. She while speaking to the media said,” I have done homely roles in all the films I have acted so far.

That is the mistake I have done. Because of this mistake there was a image that I am suitable for such roles only. Apart from this, I am bored doing these kind of homely roles.

To change this image I have decided to act in glamour roles. Because of this I have conducted a photo shoot. My idea is that once we have decided to act, we should be ready to act in any roles.

I will be acting in a Tamil film. Talks are going on regarding this.”

Lakshmi Rai says that she is busy

Lakshmi RaiLakshmi Rai who had acted in Tamil films was donning second heroine roles only. When Lakshmi Rai asked was asked that why she is getting in lesser Tamil films, she said,” It is not like at all.

In Tamil I am acting with Ajith in Mankatha and in the film directed by Raghav Lawrence. I am also having many Malayalam films in my hand.

Since I don’t have star status, I am very busy actress.”

Trisha refuses to do the role of a commercial sex worker

TrishaTrisha was offered a role of a commercial sex worker in a Telugu film and was also offered a heavy sum to act in this film. But Trisha refused to do this role. While speaking about this said,” The prostitute role is a challenging one.

It is not a easy thing to act in this role. That is why I refused to act in that film. I don’t have the maturity to do this role. If I do the role, it should be in such a way that no other actresses should have done it. All the actresses should be scared seeing my acting.

When I get that kind of boldness, I will act in such kind of roles. The film Manmadhan Ambu in which I had acted with Kamal is being released on 17th of this month. I was very scared and nervous when I had acted with Kamal because this is my first film with him. This film gave me a feel that as if I was acting in my first film.

I am very much eagerly expecting this film. There is nothing wrong in the rumors about the actors and actresses. It helps in the growth of the heroine. Because of this actors and actresses should not be worried. Some actresses have the habit of spreading rumors about themselves for publicity sake. I am not such kind a person.”

மதுவுக்கு அடிமையான மஞ்சுளா… விபச்சாரம் பற்றிப் பேச அருகதையில்லாத விஜயகுமார்! – மகள் வனிதா அதிரடி

அம்மா மஞ்சுளா மதுவுக்கு அடிமையாகிவிட்டவர் என்றும், அப்பா விஜயகுமார் விபச்சாரம் பற்றிப் பேசவே அருகதையில்லாதவர் என்றும் நடிகையும் அவர்களின் மகளுமான வனிதா கூறியுள்ளார்.

மேலும் விஜயகுமார் வீட்டில் நடந்த பல விஷயங்கள் குறித்தும் பகிரங்கப்படுத்தியுள்ளார.

இது தொடர்பாக நடிகை வனிதா நேற்று அளித்த பேட்டி:

என் முதல் கணவர் ஆகாஷுக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என் தந்தை விஜயகுமார் வீட்டில் விட்டு இருந்தேன். அவனை மீண்டும் அழைத்த போது தகராறு ஏற்பட்டது. குழந்தையை அனுப்ப மறுத்தனர். பிறகு போலீசாரை அழைத்து போய் கூட்டி வந்தேன். குழந்தையை அழைத்து வர தாய்- தந்தைக்கு உரிமை உண்டு.

கொலை செய்யவும் தயங்கமாட்டேன்…

என் குழந்தைக்கு விஜயகுமார் நிறைய தப்பான விஷயங்களை கற்று கொடுத்தார். அதனால் தான் அழைத்து வந்தேன். எனது குழந்தைக்கு ஆபத்து விளைவித்தால் கொலை செய்யவும் தயங்கமாட்டேன்.

என் மகனை நடிக்க வைக்க முயற்சித்தனர். அது எனக்கு பிடிக்கவில்லை. நான் குழந்தையாக இருந்தபோது பார்த்து தெரிந்த பல விஷயங்களை என் மகன் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே அவனை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தேன்.

எனது அம்மா மஞ்சுளா இப்போது சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அவரை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டனர். இப்போது அம்மாவுக்கு ஒரு கிரவுண்ட் நிலம்தான் உள்ளது. அம்மாவை மதுவுக்கு அடிமையாக்கி அவரது சொத்துக்களை அப்பா பறித்துள்ளார். அத்தனை சொத்துக்களும் அருண்விஜய் பெயரில் உள்ளன.

1986ல் அப்பா சொந்தமாக இரண்டு படங்கள் எடுத்து நஷ்டமடைந்தார். அதன்பிறகு படம் எதுவும் வரவில்லை. எனது அம்மாவுக்கும் அப்போது போதிய படங்கள் இல்லாததால் வருமானம் குறைந்தது.

திருட்டுத்தனமாக அமெரிக்கா… டாக்டருடன் தொடர்பு

பின்னர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா அம்மா சென்றார். அங்கு ஒரு டாக்டருடன் அம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த டாக்டர் உதவியுடன் ஹோட்டல் ஒன்றைத் திறந்தனர். அந்த ஹோட்டலில், அப்பாவிடம் மேனேஜராக இருந்த குமாரின் தம்பி சாந்தக்குமாரை வேலைக்கு சேர்த்தனர்.

ஹோட்டலில் வருமானம் நன்றாக வருகிறது என்றவுடன், அப்பாவுடன் நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றோம். அங்கு என்னோட சகோதரி கவிதாவுக்கும், ஹோட்டலில் வேலை பார்த்த சாந்த குமாருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது கவிதாவை தவறாகப் பயன்படுத்தினார்கள். இதனால் கவிதாவின் காதல் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் சாந்த குமார் தீ விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டும் வந்தது. ஆனால் அவர் எரிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை திரும்பியதும், நடிகர் எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரியின் உதவியுடன் கவிதாவுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

நாக்கு அழுகிடும்…

என்னைப் பற்றி விஜயகுமார் அவதூறாக பேசுகிறார். அப்படி பேச அவருக்கு தகுதி இல்லை. என்னைப் பற்றி குறை சொன்னால் நாக்கு அழுகி விடும். விஜய குமார் வீட்டில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து வெறுத்துப் போனேன். வாழப்பிடிக்காமல் ஓடினேன். ஏழு வயதிலேயே தற்கொலைக்கு முயன்றேன்.

என் மூலமாக எந்தெந்த வழிகளில் வருமானம் வரும் என்றுதான் என் தந்தை பார்த்தார். சிறிய தொகை கொடுத்தாலும் போதும் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார். அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்கவே திருமணம் செய்து கொண்டேன்.

ஆகாஷுடன் நடந்த திருமணத்தை தவறானது என்று சொல்ல மாட்டேன். அவரை விவாகரத்து செய்ததிலும் தவறு இல்லை. ஒரு பெண் 25 வயதில் தனியாக வாழ முடியாது. எனவேதான் இரண்டாம் திருமணம் செய்தேன்.

விஜயகுமார் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அது பாவப்பட்ட வீடு. அங்கு பல விஷயங்கள் செய்கின்றனர். அந்த வீடு எனக்கு தேவையில்லை.

நடிகைகள் விபசாரம் செய்கின்றனர் என செய்தி வந்தபோது விஜயகுமார் ஆவேசப்பட்டார். அப்படி கோபப்பட அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

எனது வீட்டில் பல விஷயங்கள் நடந்தன. என் அம்மா சொன்ன விஷயங்களை நான் செய்ய வில்லை. வீட்டில் நடந்த விஷயங்களை நான் மட்டும்தான் எதிர்த்து கேட்டேன். என்னை அடைத்து வைத்து அடித்து உதைத்தனர். நான் தைரியமாக எதிர்த்து நின்றதால் யாருக்கும் என்னை பிடிக்கவில்லை. நான் நல்ல பெண்ணாக இருந்ததால் அவர்கள் சொல்வதற்கு முடியாது என்று தீர்க்கமாக பதில் சொன்னேன். அதனால் நிறைய பிரச்சினைகள் வந்தன…

ஸ்ரீதேவி விவகாரம்…

ஸ்ரீதேவியை 2 வயதிலேயே நடிக்க வைத்து விட்டனர். ஸ்ரீதேவியை படிக்க வைக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு எதிர்பார்த்ததுபோல படங்களிலும் வாய்ப்பு வரவில்லை. ஆகையால் அவருக்கு திருமணம் செய்ய படாதபாடுபட்டார்கள்.

அவர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. பிள்ளைகளின் சந்தோஷம், விருப்பம், வாழ்க்கை போன்றவைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. படம் படம் என அம்மா பிஸியாக இருந்தார்.

அப்பா தற்போது இருக்கும் வீட்டை நான் பறிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டுகிறார். அந்த வீட்டில் என்ன நடந்தது என்பதை நான் சின்ன வயதில் இருந்தே பார்த்தவள். அங்கு நடக்க கூடாது எல்லாம் நடந்தது. அந்த வீட்டில் நான் பார்த்ததை என் மகன் பார்க்கக் கூடாது. நீதி கிடைக்கும் வரை போராடப்போகிறேன்.

என் மகன் நாளைய கமல்ஹாஸன்…

எங்களைப் படிக்க வைக்காத அப்பா, எப்படி என் மகன் ஸ்ரீஹரியை படிக்க வைப்பார். ஸ்ரீஹரியை சினிமாவில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்க அப்பா முயற்சி செய்கிறார். ஸ்ரீஹரி திறமையானவன். அவனை இழக்க நாங்கள் விரும்பவில்லை. சினிமாத்துறையில் நாளைய கமலஹாசனாக அவன் வருவான்,” என்றார்.

வனிதா கணவர் ஆனந்தராஜ் கூறுகையில், “விஜயகுமார் வீடு பாவப்பட்ட வீடு. ஹரிக்கும் பிள்ளைகள் இருக்கிறது. அந்த வீட்டில் தனது பிள்ளைகளை ஹரி தங்க வைப்பாரா?” என்றார்.

சிக்குபுக்கு – திரை விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம், ப்ரீத்திகா ராவ்
ஒளிப்பதிவு: கேபி குருதேவ்
இசை: கலோனியல் கஸின்ஸ்
இயக்கம்: மணிகண்டன்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல்
பிஆர்ஓ: செல்வரகு

மறைந்த இயக்குநர் ஜீவாவின் சிஷ்யர் இயக்கியருக்கும் முதல்படம். நிறைய காட்சிகளில் ஜீவாவின் பாதிப்பு தெரிந்தாலும், ஒரு நல்ல பொழுதுபோக்கைத் தரும் நோக்கம் தெரிகிறது. ஆனால் நினைத்ததை முழுமையாக செயல்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறார் பல இடங்களில்.

லண்டனில் வசிக்கும் ஆர்யா, தன் பூர்வீக வீடு கடன்காரர்களின் பிடியில் மூழ்கிப் போகாமல் தடுப்பதற்காக காரைக்குடிக்கு பயணமாகிறார். அதே லண்டனில் வசிக்கும் எம்பிஏ பட்டதாரியான ஸ்ரேயா உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்க்க மதுரைக்கு கிளம்புகிறார். இருவரும் ஒரே ப்ளைட்டில் பெங்களூர் வருகிறார்கள்.

பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானம் ஸ்ட்ரைக் காரணமாக ரத்தாகிவிட, யதேச்சையாய் ஒரு ரயில் டிக்கெட் கிடைக்கிறது. வேறு ஒரு தம்பதியின் டிக்கெட். அவர்களின் பெயரில் இவர்கள் பொய்யாக கணவன் மனைவி போல பயணிக்கிறார்கள். ஆனால் அந்தப் பொய்யைக் கண்டுபிடித்து விடுகிறார் டிடிஆர். பாதிவழியில் இறக்கிவிட, கிடைக்கிற வாகனங்களில் காதலும் சிணுங்கலுமாக பயணிக்கிறார்கள். இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இடையில் ஆர்யாவின் தந்தையின் (அவரும் ஆர்யாதான்… டபுள் ரோல்) காதல் ப்ளாஷ்பேக் விரிகிறது. நண்பனுக்காக காதலை விட்டுக் கொடுக்கிற அவரது கதை, மகன் ஆர்யா – ஸ்ரேயா காதலுடனே பயணிப்பது கொஞ்சம் புதுசு.

ஆர்யா தன் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார் இயக்குநர். ஆனால் அவரோ சில காட்சிகளில் ஈடுபாடே இல்லாமல் வந்து போவதைப் போன்ற உணர்வு நமக்கு.

அந்தக் கால அப்பா ஆர்யா, இன்றைய மகன் ஆர்யா… இரண்டு கெட்டப்புகளையுமே கவனமெடுத்து உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றில் மகன் கேரக்டரில் ஆர்யா வழக்கம்போல வருகிறார். அப்பா வேடத்தில் பரவாயில்லை.

அவருக்கு இரண்டு நாயகிகள். இந்தக் கால ஆர்யாவுக்கு ஸ்ரேயா ஜோடி. கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் க்ளாமர் என்ற பெயரில் அவர் செய்வதில் கிளுகிளு உணர்வுக்கு பதில் பரிதாபமே மிஞ்சுகிறது. உடம்பைப் பாத்துக்கங்க அம்மணி!

ஆனால் அவரை விட அழகில் ஈர்க்கிறார் மீனாள் என்ற கேரக்டரில் அறிமுகமாகியுள்ள ப்ரீத்திகா. அப்பா ஆர்யா – ப்ரீத்திகா காதல் காட்சிகளில் இளமை குறும்பு கொப்பளிக்கிறது. ஆனால் நடிப்பில் இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரீத்திகாவுக்கு.

சந்தானம், ஜெகனின் காமெடி படத்துக்கு ரொம்பவே கைகொடுத்துள்ளது. அப்பா ஆர்யாவின் நண்பராக வரும் அனுப்குமார் பாத்திரமும், அவரது நடிப்பும் மகா எரிச்சல். அப்பா ஆர்யாவின் காதலுக்கு ஏற்படும் முடிவும் படு செயற்கை.

ஆர்யா – ஸ்ரேயா ஜோடி ஓகே என்றாலும், இந்த இருவருக்குமான பயணம், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ மாதிரி ச்சும்மா இளமையும் குறும்பும் நகைச்சுவையுமாக மிளர வேண்டாமா… காட்சிகள் தேமே என்று நகர்கின்றன. சில இடங்களில் பிடித்துத் தள்ள வேண்டிய அளவுக்கு ஸ்லோ.

தொழில்நுட்ப கலைஞர்களில் குருதேவின் ஒளிப்பதி ரம்மியமாக உள்ளது. படத்தின் பெரிய மைனஸ் கலோனியல் கஸின்ஸின் இசை. பாடல்கள் – பின்னணி இசை இரண்டிலுமே தம் போதவில்லை!
Read: In English
ஆர்யா – ஸ்ரேயா பயணக் காட்சிகளில் எடிட்டர் இன்னும் கத்தி வைத்திருக்கலாம்.

மணிகண்டனுக்கு இது முதல் படம் என்ற வகையில், சில மைனஸ்களை மன்னிக்கும் மனமிருந்தால், படத்தை பொறுத்துக் கொள்ள முடியும்!

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.

ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், “காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.

விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

‘நிழல்கள் முதல் எந்திரன் வரை…’: வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!

கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த 1000 திரைப்பாடல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியாக உள்ளது.

இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது…’ தான் கவிஞர் வைரமுத்துவின் முதல் திரைப்பாடல். அதன் பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களின் பல பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொண்டன அவர் பாடல்கள், இசைஞானியின் உதவியுடன்.

பத்தாண்டு நெடிய பயணத்துக்குப் பிறகு இளையராஜாவை விட்டுப் பிரிந்தார் வைரமுத்து. அந்த ஆரம்ப நாள்களில் வைரமுத்துவின் பயணம் சற்றுத் தடுமாறினாலும், சந்திரபோஸ் கைகொடுத்தார். பின்னர் வித்யாசாகர், ரஹ்மான், தேவா என புதுப்புது இசையமைப்பாளர்களுடன் கை கோர்த்து, அதே மிடுக்குடனும், செறிவுடனும் திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 7000 பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து.

இவற்றில் நிழல்கள் முதல் எந்திரன் வரை அவர் எழுதிய 1000 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுகிறார்.

இந்தத் தொகுப்பின் சிறப்பு அம்சம், ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்து தன் பாணியில் முன்னுரை ஒன்றையும் தந்துள்ளதுதான்.

நிழல்கள் படத்தில் இடம் பெற்ற அவரது முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது…’ பாடல் தொடங்கி, ரஜினியின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற ‘அரிமா அரிமா ஆயிரம் அரிமா’ பாடல் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும் இணைந்து இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.

கவிஞர் வாலி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
பிரபல பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்டோர், இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் சிலவற்றை மேடையில் பாடுகிறார்கள்.

பண்புள்ளவனுக்கு மெயின் ரூட்டு – கெட்டவனுக்கு பைபாஸு! -ரஜினி

பொதுவாழ்வில் பண்பாடுடன் நடந்து கொள்வோர் எப்போதும் மெயின் ரோட்டில் ஊருக்குள் தலைநிமிர்ந்து செல்லலாம். மோசமானவனா இருந்தா ப்ளாட்பாரம் கூட கிடைக்காது, பைபாஸ்ல ஊருக்கு வெளிய போக வேண்டியதுதான், என்றார் ரஜினிகாந்த்.

தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்தது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் முதல் இசைத் தட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பியதும் முதல்வரிடமிருந்து போன் வந்தது. வருகிற 5-ம் தேதி ஊரில் இருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். அதன் பிறகு இந்த இளைஞன் பட இசை விழா இருக்கிறது. நீங்க வரணும்னு ஆசைப்படறோம்… வரமுடியுமா என்றார். நான் உடனே சரி சொல்லிவிட்டேன்.

அவர் வயசென்ன, இருக்கிற நிலை என்ன.. அவர் வயசுக்கு என்கிட்ட இவ்ளோ தூரம் கேட்டிருக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சி இருக்கு வாங்கன்னு கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்பேன். ஆனால், அந்த பண்பாடு… பக்குவமான அணுகுமுறை… இதுதான் என்னை வியக்க வைத்தது. அதனாலதான் அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கிறார்.

ஒண்ணு சொல்லிக்கிறேன்… பண்பாடுள்ள மனிதனால் மட்டும்தான் நேர்வழில, மெயின் ரூட்ல போக முடியும். இல்லேன்னா பிளாட்பாரத்துல கூட நடக்க முடியாது. பைபாஸ்லதான் போயாகணும். அதாவது ஊருக்குள்ள நுழையவே முடியாது… ஊருக்கு வெளியே அப்படியே சுத்திக்கிட்டு கண்ணுக்கு மறைவா போயிட வேண்டியதுதான்.

இந்த மழை வெள்ள நேரத்துல, முதல்வருக்கு ஏராளமான மக்கள பிரச்சினை இருக்கும். வெள்ள சேதம் நிறைய இருக்கும், மக்கள் அவதிப் படற இந்த நேரத்துல, அதிகமா டைம் எடுத்துக்க விரும்பல.

என்னை வித்தியாசமாக காட்டியவர் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா. அண்ணாமலை படத்தில் ஒரு வித்தியாசமான ரஜினிகாந்தை காட்டினார். தொடர்ந்து பாட்ஷா, வீரா ஆகிய படங்களில் என்னை மாறுபட்ட கதாபாத்திரங்களில் காட்டினார்.

இந்த படத்தின் டிரைலர் பார்த்தேன். ஷங்கர் படங்கள் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. ஒரு நல்ல நடிகராக பா.விஜய்யை பார்த்தேன். இந்த வயதிலும் இளைஞர்களுக்கு வாலி பாட்டு எழுதுகிறார். அதேபோல் இந்த சின்ன வயதில் வாலி அளவுக்கு பாட்டு எழுதும் பா.விஜய்யை பாராட்டுகிறேன்.

எனக்கு நடிகர் நம்பியாரை ரொம்ப பிடிக்கும். அவர் எப்போதுமே சந்தோஷமாக இருப்பார். அவரிடம், உங்களுக்கு வயது என்ன ஆகிறது? என்று கேட்டேன். “என் உடம்புக்கு வயது 80. மனசுக்கு வயது 18” என்றார்.

அதேபோல் தான் கலைஞரும் இளைஞராக இருக்கிறார். கலைதான் அவரை இவ்வளவு சந்தோஷமாக, ஆரோக்கியமாக வைத்து இருக்கிறது. அவருடைய பேனாவுக்கு இன்னும் வயது ஆகவில்லை. இன்னும் அவர் நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கும், கலைக்கும் சேவை செய்ய வேண்டும்,” என்றார் ரஜினி.

கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.

லட்சுமி ராய் இதுவரை ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தையே எட்டவில்லை. ஆனாலும் படு பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து செய்திகளில் அடிபட்டவண்ணமிருக்கிறார்.

தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய்க்கு மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறதாம்.

தற்போது மங்காத்தா படத்திற்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ளார் லட்சுமி ராய். அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் மலையாளப் படங்களில் நடிக்கப் போகிறார்.

மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்துத வருகிறார் லட்சுமி ராய்.

மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் அந்தஸ்து இல்லை, முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகவும் இல்லை. ஆனாலும் படு பிசியான நடிகையாக லட்சுமி ராய் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

கால்ஷீட் பிரச்சினை… 3 இடியட்ஸிலிருந்து விஜய் விலகல்?

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்திலிருந்து நடிகர் விஜய் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

ஜெமினி நிறுவனம் தயாரிக்கவிருந்த ரீமேக் படம் இது. ஷங்கர் தனது கேரியரில் முதன்முதலில் இயக்கும் ரீமேக்கும் இதுவே.

தமிழில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. தெலுங்கில் விஜய் வேடத்தில் மகேஷ்பாபு நடிப்பார் எனவும் அந்தப் படத்துக்கு தலைப்பு 3 ராஸ்கல்ஸ் என்றும் அறிவித்திருந்தனர்.

படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு எழுந்துள்ளது.

விஜய் இப்போது நடித்துவரும் வேலாயுதம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். ஆனால் அதற்குள் 3இடியட்ஸை துவங்குவதில் ஷங்கர் உறுதியாக உள்ளாராம்.

வேலாயுதம் படம் முடியும் முன்பே 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதாம். எனவே இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று விஜய் கூறிவிட்டதாகவும், ஷங்கரும் அவரும் நண்பர்களாகப் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது விஜய்க்கு பதில் புதிய நாயகனைத் தேடுகிறார்கள் ஷங்கரும் ஜெமினி நிறுவனத்தினரும்…

வனிதாவைப் பெத்ததுக்காக வெக்கப்படறேன்! – மஞ்சுளா கண்ணீர்

வனிதாவை மகளாகப் பெற்றதற்காக வெட்கப்படறேன்…அவளை என் மகள் என்று இனி சொல்ல மாட்டேன், என்றார் நடிகை மஞ்சுளா கண்ணீருடன்.

நடிகர் விஜயகுமாருக்கும், அவருடைய மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

மகள் வனிதா மற்றும் மருமகன் ஆனந்தராஜை கைது செய்யுமாறு விஜயகுமாரும், அப்பா விஜயகுமார், அம்மா மஞ்சுளா மற்றும் அண்ணன் அருண் விஜய்யைக் கைது செய்யக் கோரி வனிதாவும் புகார்கள் கொடுத்துள்ளனர். இதில் விஜயகுமார் புகாரின் அடிப்படையில் வனிதா கணவர் ஆனந்தராஜ் கைது செய்து, ஜாமீனில் விடப்பட்டார்.

ஆனால் வனிதா கொடுத்த புகாரில் இன்னும் யாரையும் காது செய்யவில்லை போலீஸ். எனவே அவர்களைக் கைது செய்ய வனிதா வற்புறுத்தி வருகிறார். விஜயகுமாரும் மஞ்சுளாவும் ஹைதராபாதில் தலைமறைவாக உள்ளதாகும், அருண்விஜய் அமெரிக்காவுக்கு தப்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரும் அவர் மனைவியும் நடிகையுமான மஞ்சுளாவும் நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது மஞ்சுளா தன் மகளின் செயலை நினைத்து வேதனையுடன் கண்ணீர் வடித்தார்.

அவர் கூறுகையில், “வனிதாவை என் வயிற்றில் சுமந்து பெத்ததுக்காக வெட்கப்படுகிறேன். அவள் முதலில் நடிகர் ஆகாஷை காதலிப்பதாகச் சொன்னாள். அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவள் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தோம்.

2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆகாஷுடன் தகராறு செய்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவருடன் வாழமாட்டேன் என்றாள். நாங்கள் அவளை சமாதானப்படுத்தினோம். குடும்பம் என்றால் தகராறு வரத்தான் செய்யும். நாம்தான் அனுசரித்துப்போக வேண்டும் என்று அறிவுரை கூறினோம்.

ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அவள் விவாகரத்துக்கு மனு செய்து இருக்கிறாள். ஒரு வருடம் கழித்து, ஆன் லைன் மூலம் ஆனந்தராஜை காதலித்து, திருமணமும் செய்துகொண்டாள்.

என் கணவருக்கு 2 மனைவிகள் இருக்கிறோம். இரண்டு பேர் மூலமும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரிதான் அன்பு செலுத்தி வருகிறோம். மூத்த மனைவி பிள்ளைகள், இளைய மனைவி பிள்ளைகள் என்ற பேதம் எங்களுக்குள் இல்லை.

வனிதா ஒருத்திதான் இப்படி ஆகிவிட்டாள். அவளை என் பொண்ணுன்னு சொல்றதுக்கே வெட்கப்படுகிறேன்…,” என்றார்.

கோவா திரைப்பட விழாவில் வசந்த பாலனின் அங்காடித் தெரு!

புகழ்பெற்ற கோவா திரைப்பட விழாவில் வசந்தபாலனின் அங்காடித் தெரு படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

பொதுவாக சமூக அக்கறை கொண்ட அல்லது கலை சார்ந்த படங்கள் படைப்பாளிகளின் பாராட்டுக்களைப் பெறும்… வர்த்தக ரீதியில் தோற்றுவிடும். ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அங்காடித்தெரு கலை ரீதியிலும் சரி, வர்த்தக ரீதியிலும் சரி… பெரும் வெற்றி பெற்றது.

புதுமுகம் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் 126 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றது. ஐங்கரன் இன்டர் நேஷனலின் நிறுவனம் அதற்கு முன் கமர்ஷியல் படங்கள் சிலவற்றின் தோல்வியால் பட்ட நஷ்டத்தைக்கூட அங்காடித் தெரு சரிகட்டியது.

ஒவ்வொரு வருடமும் கோவாவில் நிகழும் இண்டர்நேஷனல் திரைப்பட விழா இந்திய திரையுலகை பொறுத்தவரை மிக மரியாதையானது, கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடந்த 41 வது சர்வதேச திரைப்பட விழாவில் அங்காடித் தெரு திரையிடப்பட்டு பல நாட்டு ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.

விழாவில் படத்தின் இயக்குநர் வசந்த பாலன் பங்கேற்றார்.

Saturday, December 4, 2010

Arya apologizes to Tamil Cinema who made him a successful hero

AryaArya in a statement said,” I first and foremost extend my greetings and wishes to Tamil cinema members and Tamil fans. In the recent times there were some news in the media that I have spoken ill of Tami cinema.

All of you might have read it. It was you who encouraged me in my debut film Ullam Ketkume and made me an actor in the film Nan Kadavul. It was you who gave me the status of a hero in Madrasapattinam and Boss Engira Bhaskaran.

IF that is the case, do you think that I would have spoken bad about Tamil cinema. Because of you and the status you gave me made me great and was invited to all the forums including this controversial Dubai festival.

I even would not dream about talking bad about Tamil cinema which gave me life and fame. If at all had I hurt the feelings of anyone, I hereby tender my heartfelt apologies. At this juncture I would like to thank Radha Ravi, Sarath Kumar and Vagai Chandrasekaran for their support in this issue. Finally I also thank Mr Ramanarayanan, President of the Tamil Film Producers Council for intervening in this matter and settling it amicably.”

Actor Vijayakumar comes to sub urban Police Commissioner Office

VijayakumarThere is a feud between actor Vijayakumar and his daughter Vanitha. Based on the complaint given by Vijayakumar, his daughter Vanitha’s husband Anand Raj has been arrested and remanded in the prison.

Later on he was released on bail. Vanitha had already given a complaint to the police about her father Vijayakumar and her brother Arun Vijay. Since the police did not give importance to that compliant, she has once preferred a complaint against them.

In that complaint she has mentioned that Arun Vijay has phoned and threatened to kill her. Following this 4 cases including murder charges has been framed against Arun Vijay.

It is expected that Arun Vijay would be arrested. There is news that Arun Vijay is in America while some say he his holed in Hyderabad. Since Vanitha has complained to the police and also has mentioned that she will reveal the family secrets, Vijayakumar has left Chennai and is reported to be staying in Hyderabad. It was not known that when he would be coming to Chennai.

At this point of time, Vijayakumar all of a sudden came to the sub urban Police Commissioner office at Alandur this afternoon. But sub urban Commissioner Jangid was not at the office when Vijayakumar arrived. Then he went to Central Crime Branch office and told them that he would meet them after giving explanation to the Commissioner, he would them. He was in the office for about five minutes.

Oviya in Manmadha Ambu

OoviyaManmadha Ambu is a film which has Kamal Haasan and Trisha in the lead roles. Sangeetha and Madhavan are also in the cast. The film which is being produced by Udhayanidhi Stalin is being directed by K S Ravikumar. Devi Sriprasad has composed the music. The audio CD was launched recently in a big way at Singapore.

There was news that Oviya who had acted in Kazhavani is also acting in this film. When asked her about this, she said,” After Kazhavani, I am acting in few films including Muthukku Muthaga. I am appearing in some scenes in Manmadhan Ambu. All these scenes will not be the usual ones.

There will be a lot of comedy. Though this is a guest role, there should be some boldness to do this guest role at this young age. I acted because it was Kamal sir’s film. I think the story will be like Thenali, Panchathanthiram and Avvai Shanmughi.

In a short span of time after becoming an actress, I got the opportunity to act in Kamal sir’s film. Many are telling that it is a rare opportunity. I will be happier if I get the opportunity to pair with Kamal.”

Actress Trisha’s dream

TrishaTrisha’s long time life dream is to sing in the music of A R Rahman. Trisha is now happy that this dream is likely to be fulfilled soon.

She is going to dub for Manmadhan Ambu because of the serious training given by Kamal Haasan. She has sung a poetic song which is featuring in the audio CD of Manmadhan Ambu. In future she is going to dub in her own voice in her forthcoming films.

In order to improve her voice, she is going to classical music systematically. Her mother says,’ She will learn everything fast. She learnt swimming, yoga and diving with ease.’ Trisha might approach A R Rahman after learning classical music.

Amala Paul says that Rajni has appreciated her

Amala PaulAfter the success of Myna, Amala Paul will be doing the female lead role in the film to be directed by A R Murugadoss. She will also pair with Vikram in a film and with Arya in Vettai. Amala while speaking about the experiences she gained in Myna, she said,” It has given me a lot of experience.

Myna is the reason for my happiness that I have gained in my entire career. There was a little slip in my first film but Myna changed the fate. At this point of time a new world has dawned within me. There are lots of appreciations from many.

I get lots of phone calls appreciating me. My in box is filled with messages. Some one knocks my door and gives me flower bouquet and tells me that Rajni sir has given this. Rajni has written in his own hands saying ‘ Greetings Amala’. I had tears in my eyes and I show this to my mother.

She also weeps. This is the greatest recognition I have ever got. I never expected this. Even if I think about this now I feel very happy and also have tears in my eyes. Now I have decided that how my career should be. Within two years after coming from Kerala, they have given me a great scope.

I should retain this till the end of my cinema career. The days when I roamed the forests and the people with whom I have moved with are unforgettable. I am really thankful to every one of them there. I am also thankful for the fate and above all a great thanks to Prabhu Solomon who made all this possible for me.”

செல்போன் மாதிரி காண்டமும் எப்போதும் பாக்கெட்ல இருக்கணும்! – அனுஷ்கா

இன்றைய இளைஞர்கள் செல்போன் வைத்திருப்பதைப் போல, காண்டம் பாக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார் நடிகை அனுஷ்கா.

முன்னாள் யோகா டீச்சரான அனுஷ்கா, படங்களில் படுபிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூக சேவை விளம்பரங்களில் தோன்றுவது வழக்கம்.

இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார விளம்பரங்களில் தோன்றுகிறார் அனுஷ்கா.

இதில், “காண்டம் யூஸ் பண்ணுங்க… எட்ஸைத் தவிர்க்கலாம். இளைஞர்கள் செல்போன் வைத்துக் கொள்வது போல ஒரு பாக்கெட் காண்டம் வாங்கி வச்சிக்கலாம் பேண்ட் பாக்கெட்ல…” என்கிறார்.

இந்த விளம்பரம் வரவேற்பையும் எதிர்ப்பையும் சமமாகக் கிளப்பி விட்டுள்ளது. ‘என்னமோ இளைஞர்கள் சதா சர்வ காலமும் இதே நினைப்புடன் திரிவதைப் போல, காண்டம் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளச் சொல்கிறாரே அனுஷ்கா’ என்று கடுப்புடன் விமர்சனம் செய்துள்ளன பத்திரிகைகள்.

மன்மதன் அம்பு… ஓவியா உடைத்த ரகசியம்!!

அது என்ன மன்மதன் அம்பு… எந்த மாதிரி படம் இது… காதலா… சஸ்பென்ஸ் கலந்த நகைச்சுவையா அல்லது வயது வந்தவர்களுக்கான செக்ஸ் காமெடியா என ரசிகர்கள் பலரும் கேட்கும் அளவுக்கு படம் குறித்து எதுவுமே தெரியாத நிலை.

இந்தப் படத்தில் சில காட்சிகளில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள ஓவியாவோ, எல்லா சஸ்பென்ஸ்களையும் ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டார்.

என்ன மாதிரி படம் இந்த மன்மதன் அம்பு…?

“மன்மதன் அம்பு’வில் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறேன். அந்தக் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவை தூக்கலாகவே உள்ளது. அந்தளவுக்கு அந்தக் காட்சிகள் வந்துள்ளன. இந்தப் படத்தின் கதை முழுக்க நகைச்சுவைதான். ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘அவ்வை சண்முகி’ உள்ளிட்ட முந்தைய படங்களின் சாயலில் அமைந்திருக்கிறது…” என்றார்.

கவனிக்க, மூன்றுமே கமல்- ரவிக்குமார் படங்கள்தான். அப்போ.. மூன்று படங்களின் கலவையான கதையோ…!

டிச 17-ம் தேதி மன்மதன் அம்பு!

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தமிழ் சினிமாவுக்கு 2010ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது.

கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு, சசிகுமாரின் ஈஸன் மற்றும் விஜய்யின் காவலன் உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன.

மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன.

இது இம்மாத ரிலீஸ் அட்டவணை:

டிசம்பர் 3- சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம்
டிசம்பர் 10- விருதகிரி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, அய்யனார், சித்து ப்ளஸ்டூ
டிசம்பர் 17 – மன்மதன் அம்பு, ஈசன்
டிசம்பர் 24- காவலன்

இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இன்று மூன்று படங்கள்

இன்று மூன்று முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரத்த ச‌ரித்திரம் இன்று வெளியாகியுள்ளது.

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இது. ரத்த ச‌ரித்திரத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே தமிழில் வெளியாகிறது. இதனால் முதல் பாகத்தின் முக்கிய காட்சிகளை வைத்து பத்து நிமிடங்கள் கதை சொல்லியிருக்கிறார்கள்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் தா படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பத்தி‌ரிகையாளர்களை பெ‌ரிதும் கவர்ந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை ஸ்பெஷலாகப் பார்த்திருக்கிறார். சூர்ய பிரபாகர் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

மூன்றாவது ஆர்யா, ஸ்ரேயா நடித்திருக்கும் சிக்குபுக்கு. ரொமாண்டிக் காமெடியான இதனை மணிகண்டன் இயக்கியுள்ளார்.

இந்தப் படங்களின் ஆயுள்ரேகை என்ன என்பது நாளை மாலைக்குள் தெ‌ரிந்துவிடும்.

இளைஞன் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சம்!

முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாடலாசிரியர் பா.விஜய் நாயகராக நடிக்கும் கலைஞரின் இளைஞன் படத்திற்கு சுமார் 50 பக்கங்களில் ஒரு புகைப்பட ஆல்பம் மாதிரி லேமினேடட் அட்டையில் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு கோடம்பாக்கம் முழுதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வரும் ஞாயிறு (05/12/10) அன்று சத்யம் திரையரங்கில் நடைபெறும் இவ்விழாவின் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சங்களை தாண்டி உள்ளதாம்!

தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா!

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக எடுக்கிறார் கவர்ச்சி நடிகை ஷகிலா.

தமிழில் காமெடி நடிகையாக அறிமுகமாகி, பின்னர் மலையாளத்தில் கவர்ச்சி பாமாக மாறி கலக்கியவர் ஷகிலா.

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவரது படங்கள் மோகன்லால், மம்முட்டி படங்களை விட அதிக நாட்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமடைந்தார்.

இந்த நிலையி ஷகிலா தனது வாழ்க்கையை படமாக்க முடிவு செய்துள்ளார். இதற்கான கதையை அவரே எழுதியுள்ளார். இப்படத்தை எஸ்.பி.ஆர். ராஜா என்பவர் இயக்குகிறார். இவர் பயணங்கள் தொடரும் என்ற படத்தை இயக்கியவர். தெலுங்கிலும் பல படங்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றப் போகிறாராம் ஷகிலா.

இது பற்றி ஷகிலா கூறுகையில், “சினிமா இயக்குநராக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. என் வாழ்வில் நடந்த கசப்பான மற்றும் சந்தோஷமான சம்பவங்களையே கதையாக உருவாக்கியுள்ளேன். அதைப் படமாக எடுக்க உள்ளேன். இந்த படத்தில் நானே கதாசிரியராக இருப்பது மகிழ்ச்சி. எஸ்.பி.ஆர். ராஜா இயக்குகிறார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவேன்.

நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்ட மிட்டுள்ளோம்.

இதற்கு அடுத்த படத்தை நானே இயக்கவும் முடிவு செய்துள்ளேன்..,” என்றார்.

மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?

மலேசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக நடிகர் சூர்யா தனது ரத்த சரித்திரம் படத்தின் மலேசிய சிறப்புக் காட்சிக்கு செல்லாமல் தவிர்த்து விட்டார் என்றும் இதனால் அந்தக் காட்சியே ரத்தாகிவிட்டதென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் முதுகுத் தண்டு நுனியில் காயம் பட்டதால்தான் மலேசியா செல்லவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்த சரித்திரம் படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் சூர்யாவும் விவேக் ஓபராயும் நடித்துள்ளனர்.

ஐஃபா விழாவுக்கு தடையை மீறி விவேக் ஓபராய் சென்றதால் அவர் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன. இந்தப் படத்தில் நடித்துள்ள சூர்யா, பெங்களூர் மிர்ரர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விவேக் ஓபராயை எதிர்ப்பது அர்த்தமற்றது என்றும், தேவைப்பட்டால் அவருடன் தானும் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாகவும் கூறியிருந்தார். மேலும், ஈழப் பிரச்சினை செத்துப் போன ஒன்று (It’s a dead issue!) என்றும், அதுகுறித்து இப்போது பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இது ஈழத் தமிழர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் தலைவர் சீமானும், இந்த பேட்டியைப் பார்த்த பிறகு அமைதியாக பின்வாங்கிவிட்டார்.

இந்த நிலையில்தான் ரத்த சரித்திரம் வெளியாகிறது. தயாநிதி அழகிரியின் பேனரில் இந்தப் படம் வருகிறது.

படத்தின் பிரிமியர் காட்சி மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதில் சூர்யா பங்கேற்கவில்லை.

சூர்யா மலேசியாவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தமிழ் அமைப்புகள் சில எச்சரித்திருந்தன. எனவே அவர் போகவில்லை என்று கூறப்பட்டது. இதனால் மலேசிய சிறப்புக் காட்சியே ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தான் மலேசியா போகாததற்குக் காரணம் முதுகுத் தண்டு நுனியில் ஏற்பட்ட காயம்தான் என்று சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

7-ம் அறிவு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்தக் காயம் ஏற்பட்டதாகவும், மற்றபடி, மலேசியா சென்று ரசிகர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்தார் ஆர்யா!

தமிழ் திரையுலகம் பற்றி நான் மோசமாக விமர்சிக்கவில்லை. ஒருவேளை என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அதற்காக வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் நடிகர் ஆர்யா.

தமிழ் சினிமாவில் சுமாராக நடிக்கத் தெரிந்தாலும் நல்ல சம்பளம் வாங்கலாம் என்றும், மலையாளத்தில் நன்கு நடிக்கத் தெரிந்தால்தான் குப்பை கொட்ட முடியும் என்றும் துபாய் மலையாளிகள் சங்க விழாவில் பேசியதாக நடிகர் ஆர்யா மீது புகார் எழுந்தது. இதனால் கொதிப்படைந்த பெப்ஸி தலைவர் விசி குகநாதன் ஆர்யாவைக் கண்டித்தார். ஆனால் நடிகர் சங்கம் ஆர்யாவை ஆதரித்தது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்தது.

திரையுலகில் இரு அணிகளாகப் பிரிந்து மோதும் நிலை உருவானது.

ஆனால், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசி குகநாதன், நேற்று அறிக்கை விடுத்தார். அதில் நட்சத்திரங்கள் கவனமாகப் பேசவேண்டும், பிழைக்க வந்த இடத்தை பிழையாகப் பேசக்கூடாது என்றார்.

இப்போது ஆர்யாவும் தன் பங்குக்கு வருத்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும், என்னை ஆளாக்கி ஆதரித்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.

எந்த பிரச்சினைகளுக்குள்ளும் போகாமல் நடிப்பு தொழிலில் மட்டும் முழுமையாக மனதை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என்னைப் பற்றி கடந்த ஒரு வாரகாலமாக சில விமர்சனங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை படித்திருப்பீர்கள்.

அதுகுறித்து என் உண்மை நிலையை விளக்குவது தான் இந்த அறிக்கையின் நோக்கம்.

பிரச்சினைக்குள்ளான அந்த துபாய் மேடை உட்பட பல மேடைகளில் இன்று எனக்கு இடம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணமே தமிழ்த் திரை ரசிகர்கள் எனக்கு தந்திருக்கும் அங்கீகாரம் தான் என்ற அடிப்படையை அறியாதவன் அல்ல நான்.

நான் அறிமுகமான ‘உள்ளம் கேட்குமே…’ படத்தில் என்னை உற்சாகப்படுத்தி நான் கடவுள் படத்தில் என்னை நடிகனாக அங்கீகரித்து, மதராசபட்டினம் படத்தில் எனக்கு தனி அடையாளத்தை தந்து, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் என்னை வெற்றிக் கதாநாயகனாக்கிய தமிழ் ரசிகர்களின் ஆதரவிற்கும், எல்லையில்லா அன்பிற்கும் அளவு கடந்த பாசத்திற்கும் காலம் பூராவும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

தமிழ் திரையுலகம் எனக்கு தொடர்ந்து தந்து வரும் வரவேற்புதான் திரையுலகில் இன்று என் சுவாசம் என்பதை நன்கறிந்து நான் தமிழ் திரையுலகைப்பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத்துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பதுதான் உண்மை.

நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை என்பதை பணிவன்போடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தங்களை இதயசுத்தியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்காக குரல் கொடுத்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகளுக்கும், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க உதவிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம. நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் இதயபூர்வமான நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

நடிகன் என்ற நிலையில் ஆரம்ப படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்திட வேண்டிக்கொள்கிறேன்…”

இவ்வாறு அறிக்கையில் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

‘தா’… தமிழ் சினிமாவின் தரமுயர்த்தும் புதிய முயற்சி!

பெரிசாக என்ன எடுத்திருக்கப் போகிறார்கள்… பத்தோடு பதினொன்றாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் பார்க்க உட்கார்ந்தோம் நாளை வெளிவரவிருக்கும் ‘தா’ திரைப்படத்தை. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது, இது ‘சரக்குள்ள இயக்குநரி’ன் படம் என்பது.

படத்தின் க்ளைமாக்ஸ் முடிவில், பத்திரிகையாளர்கள் தங்களையும் அறியாமல் கைதட்டிப் பாராட்டினர்.

தமிழில் உண்மையிலேயே வித்தியாசமான, அதேநேரம் பொழுதுபோக்கும் நிறைந்தபடம் என்ற பெருமை தா படத்துக்கு உண்டு.

ஒரு இயக்குநரின் ஆளுமையை படம் முழுக்க உணர முடிந்தது.

சுமாரான படத்துக்குக் கூட தொலைக்காட்சி விளம்பரங்கள் தூள் பறக்க, இந்த சூப்பர் படம் சந்தடியில்லாமல் வருகிறதே என்று படத்தின் இயக்குநரான ஆர்கே சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.

“நிச்சயம் பெரிய லெவல்ல பண்ணனும் சார். படம் பார்த்த பத்திரிகைக்காரங்க ஒருமனதா பாராட்டியிருப்பது நம்பிக்கையா இருக்கு” என்றார்.

சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்த சூர்ய பிரகாஷுக்கு இது முதல்படம். படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி இதற்கு முன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம். கதை மீதிருந்த நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு ‘தா’ ஹீரோவாகியிருக்கிறார்.

நாயகியாக புதுமுகம் நிஷா அறிமுகமாகிறார். இசையமைப்பாளரும் ஒரு புதுமுகம்தான். பெயர் ஸ்ரீவிஜய்.

ராஜேஷ் உத்தமன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை முதல் திரைக்கு வருகிறது.

விஜயகுமாரை எதிர்த்து மனித உரிமை கமிஷனுக்குப் போவேன்!-வனிதா

தந்தை விஜயகுமார் என்மீது போட்டுள்ள பொய் வழக்கு, அவரும் குடும்பத்தினரும் விடுத்து வரும் கொலை மிரட்டல்கள் குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் செய்வேன் என்று வனிதா கூறினார்.

விஜயகுமார், வனிதா மோதல் தீவிரமாகியுள்ளது. வனிதா புகார் மீது நடிகர் அருண் விஜய் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து அவர் சென்னை திரும்பியதும் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் வனிதாவுக்கு கூறப்பட்டுள்ளது.

விஜயகுமார் புகார் மீது ஏற்கனவே வனிதா கணவர் கைது செய்யப்பட்டார். வனிதா மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தன. இதனால் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜயகுமார் வக்கீலும் போலீஸ் வக்கீலும் வனிதாவுக்கு முன் ஜாமீன் அளிக்க கூடாது என வற்புறுத்தினர். அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இன்னொரு புறம் வனிதா புகார் மீது விஜயகுமார், மஞ்சுளா மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயாராகி வருகிறார்கள். இருவரும் தற்போது ஹைதராபாத்தில் இருக்கின்றனர். சென்னை திரும்பியதும் விஜயகுமார் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையில் இருவருக்குமிடையில் சமரச முயற்சிகளும் நடக்கின்றன. ஆனால் வனிதாவோ வழக்கை வபஸ் பெற்றால்தான் சமரசம் பேச முடியும் என கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தை மனித உரிமை கமிஷனுக்கு எடுத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளார் வனிதா.

இதுகுறித்து வனிதா கூறுகையில், “அருண்விஜய் எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததை போலீஸ் கமிஷனர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருண் விஜய்க்கு தொடர்புள்ளவர்கள் பற்றிய விவரங்களை எல்லாம் போலீசாரிடம் சொல்லியுள்ளேன்.

விஜயகுமார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அவர் ஆதரவுக்கு பெரிய ஆட்களைப் பிடிக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அரசியலில் ஆள் பிடிக்கிறாரா வேறு துறைகளில் ஆள் பிடிக்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.

ஒன்று மட்டும் உறுதி, என் பக்கம் நியாயம் இருக்கிறது. நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளியமாட்டேன். விஜயகுமாருக்காக பெரிய ஆட்களெல்லாம் ஒன்று சேருகிறார்களாம். அதற்காக எனக்கு பயம் இல்லை என்னை சீண்டி பார்த்தால் நானும் யார் என்று காட்டுவேன்.

மனித உரிமை அமைப்புகள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்கள் அமைப்பினரும் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.

பொய் வழக்கு, கொலை மிரட்டல்கள் குறித்து மனித உரிமை கமிஷனில் புகார் செய்ய திட்டமிட்டுள்ளேன்…”என்றார்.

நடிகர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி! – சரத்குமார் அறிவிப்பு

நடிகர் நடிகைகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக நடிகர் சங்கம் சார்பில் கிரிக்கெட் கிளப் துவக்கப்படுகிறது. இதற்கான தீர்மானம் சரத்குமார், ராதாரவி பங்கேற்ற நடிகர் சங்க செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பிற மாநிலங்களில் நடிகர், நடிகைகள் கிரிக்கெட் கிளப் வைத்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுபோல் தமிழ் நடிகர்களும் தற்போது கிரிக்கெட் கிளப் துவக்குகிறார்கள்.

நடிகர் சங்க கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராகும் நடிகர், நடிகைகளுக்கு பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர் விளம்பரதாரர்கள் மூலம் நடத்தப்படும் போட்டிகளில் நடிகர், நடிகைகள் பங்கேற்று ஆடுவார்கள். தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்களுடன் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்பார்கள்.

நடிகர் சங்க கிரிக்கெட் கிளப்பை சென்னை கிரிக்கெட் கிளப்பில் பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் மற்ற மாநில மொழி நடிகர்களுடன் இணைந்து தனி கிரிக்கெட் போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நந்தலாலா, கனிமொழி… ‘பெட்டிகளை எண்ணிக்கோங்க!’

சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற உண்மையை மறந்துவிட்டு, கலைஞர்கள் தங்கள் திருப்திக்காக எடுக்கும் சினிமாவுக்கு என்ன கதி நேருமோ, அது நந்தலாலாவுக்கும் நேர்ந்திருக்கிறது.

இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் சார்ந்த திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் இரண்டே நாட்களில் தூக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை கூட படம் தாக்குப் பிடிக்கவில்லை.

நகர்புறங்களில் மிகச் சில திரையரங்குகள் மட்டுமே சுமாரான கூட்டத்துடன், இந்தப் படத்தை ஓட்டிக் கொண்டுள்ளன, அது கூட வரும் வெள்ளிக்கிழமை வரைதான்!

வெள்ளிக்கிழமை 3 புதிய படங்கள் ரிலீஸாவதால், நந்தலாலா தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இந்தப் படமாவது பரவியில்லை.. கலெக்ஷன் போனாலும் கவுரவமாவது கிடைத்தது என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் தயாரிப்பாளர்கள்.

ஆனால் கனிமொழி என்ற பெயரில் வெளியான ஒரு படம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. வெளியான அத்தனை திரையரங்கிலும் பார்வையாளர்களைத் தேட வேண்டிய நிலை. இரண்டாம் நாளே இந்தப் படத்தின் பெட்டிகளைத் திருப்பி அனுப்பி, ‘எண்ணிக்கோங்க’ என வெறுப்பேற்றினார்களாம் தியேட்டர்காரர்கள்.

இதைவிடக் கொடுமை, இந்தப் படத்தை எடுக்க ரூ 5 கோடி செலவானது என அதன் இயக்குநரும் இன்னும் சிலரும் நடிகை சோனாவுக்கு கொடுத்திருக்கும் அல்வா!

சோனாவும் தயாரிப்பாளர் சங்கத்தில் கூட முறையிட்டுப் பார்த்துவிட்டாராம். ம்ஹூம்… சோனா சொல் அம்பலமேறவே இல்லை. ’2010′ பாக்யராஜ் படமாவது கைகொடுக்குமா என கவலையுடன் கேட்க ஆரம்பித்துள்ளார் சோனா.

தமிழில் நல்ல கதை இல்லே…! – ப்ரியாமணி அலட்டல்

தமிழில் வரும் படங்களில் நல்ல கதைகளே இல்லை. அதனாலேயே நான் தமிழில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவில்லை, என்கிறார் ப்ரியாமணி.

தமிழ் சினிமாவையும் தமிழ் ரசிகர்களின் ரசனையையும் குறை சொல்வது இன்றைக்கு பேஷனாகிவிட்டது.

சமீபத்தில் மலையாளிகள் மத்தியில் தமிழரை கேவலமாகப் பேசி, அதற்கு வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஆர்யா. அவர் விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை.

இந்த நிலையில், பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரால் சினிமா வாழ்க்கை பெற்ற ப்ரியாமணி தன் பங்குக்கு தமிழ் சினிமாவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “தமிழ் சினிமாவில் நல்ல கதைகளே இல்லை. புதிதாக ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடமும் நல்ல கதை இல்லை. அதனால்தான் தமிழ்ப் படங்களை நான் ஒப்புக் கொள்வதில்லை.

முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன். தெலுங்குப் படங்களில் இந்த நிலை இல்லை”, என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியைப் படித்ததும் கொந்தளித்த இளம் இயக்குநர் ஒருவர், “ஆர்யாவுக்கு குகநாதன் கொடுத்த ட்ரீட்மெண்ட்தான் இவருக்கும் சரியாக வரும் போலிருக்கிறது”, என்றார் கடுப்புடன்.

அரவிந்த்சாமி – கவிதாவுக்கு இன்று விவாகரத்து!

விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் அரவிந்த் சாமி. அவர் மனைவியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

பிரபல நடிகர் அரவிந்தசாமி, அவரது மனைவி கவிதா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவகாரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதி பதிவு செய்தார்.

இருவருக்கும் மாலைக்குள் விவாகரத்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு

நடிகை வனிதா கொடுத்த புகாரின் பேரில் அவரது சகோதரரான நடிகர் அருண் விஜய் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தேடி வருகின்றனர்.

நடிகர் விஜயக்குமார் குடும்பத்துக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் கடந்த 2 வாரங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. வீட்டுக்குள் நடந்த இந்த சண்டை இப்போது தெருவுக்கு வந்துள்ளது.

விஜயக்குமார் மீது சரமாரியாக புகார்களை கூறிய வனிதா, தந்தை விஜயக்குமார், தாயார் மஞ்சுளா, விஜயக்குமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர்களும் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அதில் திருப்தி இல்லை என்று கூறிய வனிதா, டிஜிபியை நேரில் சந்தித்துப் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புதிய கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். அருண் விஜய் ஆட்களை அனுப்பி தன்னை மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஆட்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது, கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் அருண் விஜய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது அருண் விஜய் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஹைதராபாத்தில் இருப்பதாக முதலில் வனிதா கூறியிருந்தார். ஆனால் அவர் தற்போது இந்தியாவிலேயே இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

மதுரவாயல் காவல் நிலையத்தில் வனிதா புகார் கொடுத்தவுடனேயே அவர் அமெரிக்காவுக்குத் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், விஜயக்குமாரும், அவரது 2வது மனைவியான நடிகை மஞ்சுளாவும் ஹைதராபாத்தில் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.

வனிதாவை 3-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது! – உயர் நீதிமன்றம்

நடிகை வனிதாவை வரும் 3-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்குமான குடும்ப மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதில் வனிதா கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்துள்ளார். தந்தை விஜயகுமார், அம்மா மஞ்சுளா மற்றும் அண்ணன் அருண் விஜய்யை கைது செய்யக் கோரி டி.ஜி.பி., கமிஷனர் போன்றோரிடம் வனிதா நேரில் புகார் அளித்தார். விஜயகுமார் புகார் மீது தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன், கேட்டு உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி அக்பர்அலி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகுமார் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் போலீசோ, வனிதா தலைமறைவாக இருப்பதாக தெரிவித்துவித்தனர்.

இதுகுறித்து வனிதாவிடம் கேட்டபோது, “விஜயகுமார் என்மேல் போலீசில் அளித்துள்ளது பொய்யான புகார். சட்டப்படி முன்ஜாமீன் கேட்டுள்ளேன். அவர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார். மறைவாக இருந்து கொண்டு எனக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

போலீஸ் தரப்பில் நான் தலைமறைவாக இருப்பதாகவும் என்னைக் கைது செய்ய தேடுவதாகவும் கூறியுள்ளனர். இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. நான் ஓடி ஒளியவில்லை. தலைமறைவாகவும் இல்லை. தினமும் போலீஸ் நிலையத்துக்கும் கமிஷனர் அலுவலகத்துக்கும்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்…”, என்றார்.

தலைமறைவாக இருக்கிறாராம் வனிதா! – நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!!

நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது தந்தை விஜயகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனிதாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு, வனிதா தலைமறைவாகி விட்டதாகவும், கைது செய்வதற்காக அவரை தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நேரிட்ட அடிதடி சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். வனிதாவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வனிதா தரப்பில் வக்கீல் நாகேஷ்பாபு ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ்க்கு ஜாமீன் தரப்பட்டுள்ளது. எனவே வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.

விஜயகுமார் தரப்பில் வக்கீல் ஆஜராகி, வனிதாவுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. வனிதாவின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது, விஜயகுமாரின் கருத்தையும் கேட்க வேண்டும். எனவே அவரையும் இந்த மனு மீதான விசாரணையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

விஜயகுமார் எதிர்ப்பு!

குடும்பப் பிரச்சினையில் மகளுக்கே முன்ஜாமீன் தரக் கூடாது என்று தந்தை கூறுகிறார். இதிலிருந்தே தந்தையின் நிலையை அறிந்துகொள்ள முடியும் என்று நாகேஷ்பாபு கூறினார். அதற்கு விஜயகுமார் தரப்பில், குடும்பத்தின் ஒட்டுமொத்த மானத்தையும் வனிதா வாங்கிவிட்டார். விஜயகுமாரின் கையை வனிதாவின் கணவர் அடித்து உடைத்துள்ளார் என்று வக்கீல் பதிலளித்தார்.

அப்போது நீதிபதி அக்பர் அலி, விஜயகுமார் தரப்பில் என்ன கூற விரும்புகிறார்கள் என்பதை கேட்டு முடிவு செய்யலாம். எனவே அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யட்டும் என்றார்.

அரசுத் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு அவர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

மேலும் வனிதாவின் மனுவுக்கு அவர் பதில்மனு தாக்கல் செய்தார். அதில், “வனிதாவுக்கும், அவரது கணவர் ஆகாஷுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற குழந்தைகள் உள்ளனர். ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை வனிதா சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்.

தற்போது ஆனந்தராஜ் என்பவர் வனிதாவுடன் வசிக்கிறார். 2 குழந்தைகளும் அவர்களுடன் வசிக்கின்றனர். ஸ்ரீஹரியும், ஜோவிகாவும் தீபாவளி கொண்டாடுவதற்காக விஜயகுமார் வீட்டுக்கு 4-ந் தேதி வந்தனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக வனிதாவும், ஆனந்தராஜும், விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் ஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே விஜயகுமார் குடும்பத்தினர் முன்னிலையில் அவனை வனிதா அடித்தார். மேலும் அசிங்கமாக பேசியபடி விஜயகுமாரின் மனைவியையும் அடிக்கத் தொடங்கினார்.

இதில் தலையிட்ட விஜயகுமாரையும், வனிதா அசிங்கமாக திட்டினார். அதோடு ஆனந்தராஜுடன் சேர்ந்து அவரை தாக்கவும் செய்தார். விஜயகுமாரின் கையை ஆனந்தராஜ் முறுக்கியதோடு, அவரையும், அவரது மனைவியையும் கடுமையாக மிரட்டினார்.

இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரால் முழுமையான புகாரை உடனடியாக தர முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பிறகே புகார் கொடுத்தார்.

7-ந் தேதியன்று விஜயகுமார், மஞ்சுளா, அருண் விஜய் மீது வனிதா புகார் கொடுத்தார். அதற்கான சட்ட ஆலோசனை பெறப்பட்டு 22-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜயகுமார் 17-ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெறப்பட்டு 20-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக நடராஜன், சரஸ்வதி, சங்கர், பணியாள் கற்பகம் உட்பட பலரை விசாரித்து அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. மேலும் பல சாட்சிகளை விசாரித்த பிறகுதான் விசாரணை முழுமை அடையும்.

வனிதா தலைமறைவு!!

இந்த நிலையில் வனிதா தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். எனவே அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவர் வனிதா. எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் வழக்கின் சாட்சிகளை கலைத்துவிடுவார். இது விசாரணைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்…”, என்று கூறப்பட்டுள்ளது.

Thursday, December 2, 2010

Eesan to hit screens on December 17

After the path-breaking Subramaniapuram and the super hit Naadodigal (made in Telugu as Sambo Siva Sambo), director-actor-writer M. Sasikumar is back with his next directorial venture titled Easan. Reportedly the film is a thriller based on Chennai’s night life. The shooting is almost complete and the film will grace theatres on December 17.

Music composed by James Vasanthan was released recently. After completing Easan, Sasikumar will star in Samudrakani’s next. Interestingly Easan has 15 important characters, including Vaibhav, Samudrakani, Abhinaya, debutante Aparna, Mahanadhi Tulasi, Niranjan and Nammo Narayana.

The film will also mark the onscreen debut of producer Alagappan and Malayalam director Blessy. “There are no heroes or heroines in the film; there are only characters and all the characters play important roles,” Sasikumar said in a press meet recently.

Prabhu Deva-Nayantara fight in public

The most-talked-about couple of the recent times Prabhu Deva and Nayantara are in the news again. This time, they are in the news for verbal spat in public over Prabhu’s closeness with another actress.

According to reports, the couple were recently seen having heated verbal exchange at a private hotel. It all started when director Prabhu Deva took Hansika Motwani for a special dinner in Hyderabad. A friend of Nayantara, who saw them, informed her about their secret dinner. Soon, Nayan entered the scene and started screeching, claims report.

Hansika is currently busy with the promotions of Prabhu Deva’s directorial Engeyum Kadhal. The movie stars Jayam Ravi and Hansika Motwani in the leads.

Thambikottai ready for release

Tamil flick Thambikkottai has been in the pipeline for quite a long time. Now, it looks like the movie is ready for release and sources say that the movie will hit the screens early next month.

Confirming this piece of news to the media was lead actor of the film Narain. He says that he is very excited about the film and the movie will hit the screens in December. Thambikkottai is an out and out commercial film says Narain. It is an action drama, which is based in Tamil Nadu village by the same name.

According to reports, it is an effort on the part of the producers to showcase the lives that people residing in the Thambikkottai village. This village is located in the Thanjavur district of Tamil Nadu. If reports are to be believed, the producers have also incorporated some real-life incident, which have taken place in the village.

Starring Narain, Poonam Bajwa and Meena in lead roles. It is one of the most-awaited films of the year. Fans of actor Narain are very happy that they will get to see their favorite star onscreen after 2 years.

Reason behind Genelia's everlasting smile

We are all aware of the perky nature of South Indian and Bollywood actress Genelia D’Souza and we know how she keeps smiling all the time. But did you know the reason behind that everlasting smile? Well, Genelia reportedly has a perpetual smile on her face because of the love that is showered on her by her fans.

Recent media reports about the actress claim that she is very popular among her fans because she always greets them with her trademark bubbly smile! In fact, Genelia’s smile is so much talked about these days that most of her fans want to see her smile rather than take her autograph!

Recalling an incident which took place at the Coimbatore airport, The actress shares that as soon as she entered the airport, a horde of fans surrounded her. But contrary to her thoughts that she would now have to start signing autographs for all assembled, her fans only wanted their favorite actress to pass on her sweet and infectious smile to them. And it was this that made the actress very happy. We guess that she smiled all the more!

It was through her homepage on social networking site Twitter that Genelia shared this incident with the world. The actress was at the Coimbatore airport because her Velayudham shoot at Pollachi had been stalled due to rain.

Arya not ready to accept defeat

It seems Aarya is not prepared to sit back and accept defeat. The actor, who is in the controversy for showing his displeasure on Kollywood, says that he has never spoken any ill on Tamil film industry and that he has been framed in a case of which he is not guilty.

The actor is presently busy with the post production work of his upcoming Tamil flick Chikku Bukku. At the same time, he has also sought the help of the Nadigar Sangam to help in his endeavor to prove himself innocent. Aarya says that Kollywood is the industry in which he has worked for such a long period of time in his career and it is also the industry in which he has invested his own money. Therefore, it is practically illogical that he would make wrong comments about the Tamil film industry.

Aarya has been alleged of belittling the Tamil film industry in an international platform at Dubai at an event arranged by a Malayalam network. However, Film Employees Federation of South India (FEFSI) has disassociated itself from actor Aarya’s controvery.

Shruthi Hassan-Udhayannandhi Stalin movie titled Nanbeanda

Shruti Hassan and Udhayanidhi Stalin starrer will be named Nanbaenda. It is a phrase from director M Rajesh’s earlier flick Boss Engira Bhaskaran (BEB).

The reports claim that M Rajesh had chosen a different name for this upcoming film. But it was the huge success of BEB, which inspired him to have the title Nanbaenda. Earlier, it was titled Oru Kal Oru Kannadi. Sources say that the director has also made some changes in the script.

M Rajesh has re-written some portions of the film. The result being that now the heroine will share equal screen space with the hero.

Surya vs Arya

The year 2010 has seen many ups and downs in Tamil film industry. Many actors have tasted success including Surya and Aarya. Now, these stars are heading for a clash with Rakta Charitra and Chikku Bukku releasing on December 3.

Ram Gopal Varma directorial movie Rakta Charitra (RC) is a biopic of Paritala Ravindra (factionist and politician) and Suryanarayanan Reddy aka Maddelacheruvu Suri. The film is being made in two parts and the first instalment has become a huge hit in Telugu and Hindi and in Tamil RC1 and 2 are hitting the screens simultaneously. The trailer and promos have already created a buzz among the masses in Tamil Nadu. But as RGV said earlier, the movie is not for the lily-livered. Nor is it for those who love to visit cineplexes with their families.

On the other hand, Aarya, who has given back-to-back hits like Madrasapattinam and Boss Engira Bhaskaran, is coming back with a romantic film Chikku Bukku. He has played a chocolate hero role in the flick. The movie is said to be a breezy love story, which also features Shreya Saran and Preeta Rao in the leads. The movie is a complete contrast to RC. The movie is is a complete family entertainer without any violence. It has already generated hype among youth and class audiences.

Nonetheless, the movies are completely different from each other. Along with these film, Sanikizhamai Sayangalam 5 Mani and Thaa are also hitting the screens on December 3.

Vijay's Kaavalan in trouble again

Ilayathalapthy Vijay is in trouble again! Recently, Tamil Nadu theatre owners and distributors unanimously decided to demand refund of a portion of the amounts they invested in Vijay’s 50th film Sura, since it bombed at the box office.

Now, since the actor has failed to fulfill this demand of the theatres owners, the Tamil Nadu Theatre Owners’ Association has decided to boycott his forthcoming film Kaavalan until an amicable settlement is reached. According to the theatre owners, Vijay has to pay 30% of the loss suffered by theatres, which approximately works out to Rs. 3 crores.

Vijay’s Kaavalan, directed by Siddique, is scheduled for a worldwide release on December 24, 2010.

Vijaykanth's Virudhagiri is Ready

In the midst of his demanding schedules in the political arena, veteran Tamil actor ‘Captain’ Vijayakanth has started his next film Virudhagiri directed by Vijayakanth himself and produced by L.K. Sudeesh under the banner of Captain Cine Creations. The film also has Madhuri Idaki, Shankar, Arun Pandian, Mansoor Ali Khan and Peeli Sivam in prominent roles.

The film is now ready and will reportedly grace theatres on December10. Virudhagiri is expected to be an Indianised version of the Hollywood movie Taken. Sundar C. Babu scores the music.

Who is Bollywood's Rajnikanth?

The Rajinikanth phenomenon matters no age, language or geography barriers. His fans are here, there and every where on the planet called earth. But Rajini fever in Bollywood is worth a special mention.

Now that after Bollywood gave a standing ovation in awe to ‘Endhiran – the Robot’, has it found anybody matching Rajinikanth’s superstardom and charisma?

It is difficult yet to answer affirmatively now. But Kareena Kapoor feels there is one. She feels Salman Khan can be called the Rajinikanth of Bollywood given his mass appeal that defies all logic.

Kareena has said that Salman Khan is a phenomenon and a natural born actor whose all actions become a craze. “To me, he’s the Rajinikanth of Bollywood.” Kareena added.

It is interesting to note here that Salman Khan’s recent blockbuster film ‘Dabangg’ was hyped as a ‘Rajinikanth style film’ by the media and others for its down to earth logic defying heroism.

Dhanush's Secret of Success

Dhanush is one of the very few actors in Kollywood now who has been delivering hits after hits in the recent past. Not even a film of his bombed at the box office, at least the last few years.

“I sit with the directors of my movies before we go for shoot and discuss clearly what they expect out of me. This helps me mould for the character better,” says the actor, who is on the sets of ‘Venghai’.

He adds: “Also, I believe strongly in homework. Before each and every scene, I make sure that I am prepared for it well. This result in better output I guess.”

“At a very young age I have seen many a success and many a failure,” the actor says and adds: “And I learn lessons from each and every person I come across. After all, life is filled with so many learning experiences.”

Meanwhile, Sun Pictures has started promoting its next release ‘Aadukalam’, which is a Dhanush-starrer. The film brings together the ‘Polladhavan’ trio- Vettrimaran, Dhanush and G V Prakash- once again.

One of the songs from the film ‘Ayyayyo…’ has already topped the charts and those who have listened it say the number is a perfect melody and takes them back to the golden era of Illayaraja..

Shankar's 3 Idiots remake titled Moovar

Shankar’s next film has been tentatively titled Moovar. The director, who has been considering some titles like Nanban and 3 Rascals, has finally zeroed in on Tamil version of the film. The movie is a remake of blockbuster Hindi film 3 Idiots.

Earlier, the movie was reportedly titled 3 Rascals. But the movie bosses have decided to retain this title for Telugu and change Moovar for Tamil version, say sources. The movie will hit the floors on December 5.

According to reports, Shankar has made some changes in the script to suit the taste of the regional audience. The director is reportedly planning to cast two female leads in the film. But in the original version, there was only one female lead, which was played by Kareena Kapoor.

Shankar has already roped in Ileana for the first lead. But he is yet to reveal about second female lead. The Tamil version features Vijay, Jeeva, Srikanth, Sathyaraj and others in the cast. Harris Jayaraj is scoring the music and Manoj Paramahamsa will handle the camera.

Pasupathy says that he will not act in any other films until Aravaan is over

Aravaan PasupathyPasupathy said that he will not act in any other films until he has completed acting in Aravaan. While speaking about this, he said,” I am acting in the only film Aravaan directed by Vasanthabalan.

For the last one year, I have not agreed for any other films, because Aravaan is one of the important films in my career.

I have made some changes in my physique and appearance. That is the reason I am not participating in any public functions. When we gat some good roles, it is inevitable that we should sacrifice some opportunities and also work hard.

In that way, I have avoided lot of offers. Aravaan will be completed by March. After this I will be acting three films.”

மன்னிப்புக் கேள்… இல்லையேல் மலையாளத்துக்கு ஓடு!! – ஆர்யாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

தமிழ் சினிமாவையும், தமிழர் ரசனையையும் குறை கூறிய ஆர்யா இனி தமிழில் நடிக்கக் கூடாது என்றும், அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், மலையாளத்துக்கே போய்விட வேண்டும் என்றும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் ஆர்யா. சமீபத்தில் துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் இவர் பங்கேற்றார். தன்னை ஒரு மலையாளி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், தமிழர்களை ரசனை இல்லாதவர்கள் என்றும், நல்ல படம் எடுக்கத் தெரியாதவர்கள் என்றும் விமர்சித்தார்.

“எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்… மலையாளத்தில் வந்து நடிக்கிறேன். இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்கவே முடியாது” என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருந்தார் ஆர்யா.

ஆர்யாவின் இந்த பேச்சுக்கு இயக்குநரும்,தயாரிப்பாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ஆர்யாவே தமிழர்களிடம் மன்னிப்பு கேள்..இல்லையேல் மலையாளத்திற்கே ஓடு”, என்ற கோஷம் இப்போது கோடம்பாக்கத்திலும் சூடுபிடித்துள்ளது.

ஆர்யா விவகாரத்தால் பெப்சிக்கும் நடிகர் சங்கத் துக்கும் மோதல் மூண்டுள்ளது.

பிரச்சனை பெரிதாவதை உணர்ந்ததால் இது குறித்து பேசி முடிவெடுக்க முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக திரையுலகினரின் கூட்டுக் குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், மலையாள திரைவிழாவில் ஆர்யா பேசியதன் ஒலி -ஒளிப்பதிவை போட்டுக் காட்டவிருக்கிறது பெப்சி அமைப்பு.

நாளை தனது பேச்சுக்கு ஆர்யா மன்னிப்புக் கேட்பார் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவேன்: வனிதா பேட்டி

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜயகுமார் குறித்த ரகசியங்களை புத்தமாக வெளியிடுவேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார்.

வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் ஐதராபாத்திலும், அருண் விஜய் அமெரிக்காவிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருவர் கொடுத்த புகார் குறித்த வழக்குகள், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் தினசரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற வனிதா, கமிஷனரை சந்தித்து புகார் குறித்து விளக்கினார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தன் கணவர் ஆனந்தராஜனுடன் திடீரென வந்த வனிதா, கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, அருண் விஜய் மீது புகார் அளித்தார்.

அப்போது வனிதா கூறியதாவது: நான் குடியிருந்து வரும் நுங்கம்பாக்கம் வீடு,”சிட்டி போலீசின் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் வந்து புகார் அளித்துள்ளேன். அமெரிக்க தூதரகமும் தன்னிச்சையாக இங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி, நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து, என் கணவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின், நள்ளிரவு 2:30 மணியளவில், மூன்று ரவுடிகள் கையில் ஆயுதங்களுடன் வந்து என்னையும், குழந்தைகளையும் மிரட்டினர்.

சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது; போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கக் கூடாது; மீறினால் கொன்று விடுவோம் என்று கூறி, என் மகள் ஜோவிகாவின் கழுத்தை நெரித்தனர். அதை என்னால் மறக்கவே முடியாது. போனில் பேசிய அருண் விஜய், “வெளியில் பேசினால் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். குழந்தைகளை பற்றி கவலைப்படாமல்; அவர்களது, “இமேஜ், பாப்புலாரிட்டி பற்றியே கவலைப்படுகின்றனர். ஆட்களை அனுப்பியவர் இயக்குனர் ஹரிதான். அருண் விஜய்க்கு ஆட்கள் கிடையாது; ஹரிக்கு தான் அடியாட்கள் பலம் இருக்கிறது. புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் நேர்மையாக, சட்ட ரீதியாக எதை செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன். சட்டம் பதில் சொல்லும். என் அப்பா, தன் பேட்டியில் ஏதேதோ கூறி வருகிறார். அவர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். புறநகர் கமிஷனர், என் புகாரின் மீதான உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, நான் செய்வது சரி தான் என்று கூறியுள்ளார். மேலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டினேன். நான் கொடுத்த புகாரில் கூறியுள்ளதற்கு, அவர்கள் பதிவு செய்திருந்த வழக்கின் பிரிவுகள் பொருத்தமானதாக இல்லை என்பதை தெரிவித்தேன். அது குறித்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இருவர் வாழ்த்து சொல்வதற்காக என் வீட்டிற்கு வந்தனர். பொதுவாக நடந்த அந்த சந்திப்பின் போது, அவர்கள் என் குழந்தை படிக்கும் பள்ளி குறித்து கேட்டறிந்தனர். எதற்காக கேட்டார்கள் என்பது தெரியவில்லை. இது, எனக்கு அவர்கள் மீது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் புகாரில், குறிப்பிட்டுள்ளேன். இதற்காக நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை; கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.

“எனக்கு எதுவும் நடக்கலாம்…! இந்த சம்பவத்தில், என் தந்தை, தனக்கு தெரிந்த அரசியல் தலைவரை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அவர், சந்திக்க மறுத்ததால், தனக்குள்ள,”பாப்புலாரிட்டியை பயன்படுத்தி வருகிறார். தைரியமாக போராடும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். விபத்து ஏற்படலாம்; கடத்தப்படலாம். அப்படி நடந்தால், அது யாரால் என்பது இவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் நான் இங்கு புகார் அளித்துள்ளேன். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நேர்மையாக போராடட்டும்; எதற்கு சட்ட விரோதமாக போக வேண்டும். அருண் மீது தான் நான் புகார் கொடுத்துள்ளேன்; அவர்தானே ஒளிந்து கொண்டுள்ளார். என்னிடம் யாரும் போனில் பேசவில்லை. நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று விசாரித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போவதில்லை. நான் கோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தேன். என் தந்தை, அதற்கு தனது வக்கீல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.

“இது 30 ஆண்டு கோபம்: நடிகர் விஜயகுமார் – வனிதா இடையிலான மோதல் குறித்த கேள்விக்கு வனிதா விஜயகுமார் கூறும்போது,”"நான் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லப் போகிறேன். இது என்னைச் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வெளிவந்தால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும். இதைப் பார்த்து, சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் யோசிக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் விஷயம் வெளியில் வராது என நினைப்பவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இதுவரை பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு நாள் பிரச்னையல்ல; 30 ஆண்டு கோபம்; இன்றைக்கு எரிமலையாக வெடித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன, என்றார்.

“புத்தகமாக வெளியிடுவேன்: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னையில், “அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என, பலமுறை வனிதா விஜயகுமார் கூறினார். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும்,”ரகசியம் குறித்து கேள்வி எழும். அப்போதெல்லாம் சமாளித்து வந்த வனிதா, கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தபோதும், ரகசியங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்த வனிதா, “ரகசியங்கள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறேன்… படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

 
Free Host | lasik surgery new york